நற்றிணை - 213. குறிஞ்சி
அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி, 'கன்று கால்யாத்த மன்றப் பலவின் வேர்க் கொண்டு தூங்கும் கொழுஞ் சுளைப் பெரும் பழம் குழவிச் சேதா மாந்தி, அயலது வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும் |
5 |
பெருங் கல் வேலிச் சிறுகுடி யாது?' என, சொல்லவும் சொல்லீர்; ஆயின், கல்லென கருவி மா மழை வீழ்ந்தென, எழுந்த செங் கேழ் ஆடிய செழுங் குரற் சிறு தினைக் கொய் புனம் காவலும் நுமதோ?- |
10 |
கோடு ஏந்து அல்குல், நீள் தோளீரே! |
பக்கம் உயர்ந்த அல்குலையும் பெருத்த தோளையுமுடைய சிறுமிகளே!; அருவியொலிக்கின்ற பெரிய மலையை யடைந்து! கன்று கால் யாத்த மன்றப் பலவின் வேர்க்கொண்டு தூங்குங் கொழுஞ்சுளைப் பெரும்பழம் ஆவினது இளங்கன்றைக் காலிலிட்ட கயிறு பிணித்த தழைந்த மன்றம் போன்ற பலாமரத்தின் வேரிலே காய்த்துத் தூங்காநின்ற கொழுவிய சுளையையுடைய பெரிய பழத்தை; அவ்விளங்கன்றையுடைய சிவந்த பசுவானது தின்று; பக்கத்திலுள்ளதாகிய மூங்கில் நெருங்கிய சிறுமலையின்கணுள்ள குளிர்ந்த நீரைப் பருகாநிற்கும்; பெரியமலையை அரணாகவுடைய நுமது சிறிய குடிதான் யாதோ என யான் வினவ அதற்கு விடையொன்று சொல்லுதலையுஞ் செய்திலீர்! ஆயினும் அதுகிடக்க; மின்னல் முதலாய தொகுதியையுடைய கரிய மேகம் கல்லென்னும் ஒலியோடு மழையைப் பெய்ததனாலே; விளைந்த சிவந்த நிறம் பொருந்திய செழுவிய கதிர்களையுடைய கொய்யத்தக்க இத்தினைப் புனங்காவலும் நும்முடையதுதானோ? இதனை யேனுங் கூறுங்கோள்;
மதி உடன்படுக்கும் தலைமகன் சொல்லியது. - கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 211 | 212 | 213 | 214 | 215 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - சிவந்த, பெரிய, பலவின், மன்றப், கன்று