நற்றிணை - 211. நெய்தல்
யார்க்கு நொந்து உரைக்கோ யானே- ஊர் கடல் ஓதம் சென்ற உப்புடைச் செறுவில், கொடுங் கழி மருங்கின், இரை வேட்டு எழுந்த கருங் கால் குருகின் கோள் உய்ந்து போகிய முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை, |
5 |
எறி திரை தொகுத்த எக்கர் நெடுங் கோட்டுத் துறு கடற் தலைய தோடு பொதி தாழை வண்டு படு வான் போது வெரூஉம் துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே? |
ஊர்ந்து செல்லுகின்ற கடலின் நீர் ஓடிப்பரந்த உப்புப் படுதலையுடைய சேற்றினையுடைய; வளைந்த கழியிடத்து இரையை விரும்பி யெழுந்த கரிய காலையுடைய குருகின்; குத்துக்குத் தப்பிப்¢ பிழைத்தோடிய; வளைந்த முதுகும் உயர்ந்த வாயும் உடைய இறவின் ஏற்றை; மோதுகின்ற அலை கொழித்திடப்பட்ட மணல் மேடாகிய நெடிய கரையின் கண்ணே நெருங்கிய கடலின் புறத்திலே தலைசாய்ந்துடைய இலைகள் பொதிந்த தாழையினுடைய; வண்டுகள் வந்து மொய்க்காநின்ற வெளிய பூவை நோக்கி இதுவுமொரு குருகு கோலுமென்றஞ்சா நிற்கும் துறைபொருந்திய கடற்கரைக்குத் தலைவனாகிய நங்காதலன்; என்னைத் துறந்து சென்றொழிந்தனனென்று யாரிடத்தில் யான்படுந் துன்பத்தையெல்லாம் புலப்படுத்து வருந்தி உரையாநிற்பேன்!
வரைவு நீட ஒருதலை ஆற்றாளாம் என்ற தோழி சிறைப்புறமாகத் தன்னுள்ளே சொல்லியது. - கோட்டியூர் நல்லந்தையார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 209 | 210 | 211 | 212 | 213 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வளைந்த, கடலின், ஏற்றை, இறவின், குருகின்