நற்றிணை - 123. நெய்தல்
உரையாய்- வாழி, தோழி!- இருங் கழி இரை ஆர் குருகின் நிரை பறைத் தொழுதி வாங்கு மடற் குடம்பை, தூங்கு இருள் துவன்றும் பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை, கானல் ஆயமொடு காலைக் குற்ற |
5 |
கள் கமழ் அலர தண் நறுங் காவி அம் பகை நெறித் தழை அணிபெறத் தைஇ, வரி புனை சிற்றில் பரி சிறந்து ஓடி, புலவுத் திரை உதைத்த கொடுந் தாட் கண்டல் சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும் |
10 |
சிறு விளையாடலும் அழுங்கி, நினைக்குறு பெருந் துயரம் ஆகிய நோயே. |
தோழீ வாழி!; கரிய கழியின் கணுள்ள மீனாகிய இரைகளைத் தின்ற குருகுகளின் நிரையாகிய பறவைக் கூட்டம்; வளைந்த பனை மடலின் கண்ணே கட்டிய குடம்பைகளில் நிறைந்த இருட்பொழுது நெருங்கியுறையாநிற்கும்; பனை மரங்கள் உயர்ந்த வெளிய மணற்கொல்லையைச் சூழ்ந்த; கானலிடத்து நின் ஆயத்தாரோடு காலையிலே சென்று கொய்து கொணர்ந்த தேன்மணம் வீசும் மலரையுடைய ஈரிய நறிய நெய்தலின் அழகிய ஒன்றோடொன்று மாறுபட்ட நெறிப்பையுடைய தழையை அழகு பொருந்த உடுத்து; கோல மிடுதலையுற்ற சிற்றில் புனைந்து சிறப்ப விரைந்தோடி விளையாடி; புலவு நாற்றத்தையுடைய அலைமோதிய வளைந்த அடியையுடைய கண்டல் மரத்து வேரின் கீழாகச் செல்லுகின்ற சிவந்த பெரிய இரட்டையாக நெருங்கியிருக்கின்ற ஞெண்டுகளை நோக்கி மகிழாநிற்குஞ் சிறிய விளையாட்டும்; இல்லையாம்படி வருத்தம் எய்துமாறு நினக்குத் தானுற்ற பெரிய துயரமாகிய நோயை நீ கூறாய்!
தலைவன்சிறைப்புறத்தானாக, தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது. - காஞ்சிப் புலவனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 121 | 122 | 123 | 124 | 125 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வளைந்த, பெரிய, கண்டல், சிற்றில், தோழி, வாழி