முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 8. மருதம் - காதற் பரத்தை கூற்று
குறுந்தொகை - 8. மருதம் - காதற் பரத்தை கூற்று
(தலைவி தன்னை இகழ்ந்து கூறினாள் என்று அறிந்த காதற் பரத்தை அத்தலைவியின் பக்கத்திலுள்ளார் கேட்கும்படி, “தலைவன் எமக்கு வயப்பட்டான் போல இங்கே இருந்து விட்டு, தலைவிபாற் சென்றுஅவளுக்கு அடங்கி அவள் மனம்போல் ஒழுகினான்; தருக்குற்று என்னை அவள் இகழ்ந்ததற்குக் காரணம் அதுபோலும்!’’ என்று கூறிய
கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம் பழன வாளை கதூஉ மூரன் எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற் கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல |
5 |
மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே. | |
- ஆலங்குடி வங்கனார். |
முடிபு: ஊரன், எம்மிற் பெருமொழி கூறிப் புதல்வன் தாய்க்குத் தம்மில் மேவன செய்வான்.
கருத்து: தலைவன் தன் மனைவியை அஞ்சி ஒழுகினான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 8. மருதம் - காதற் பரத்தை கூற்று, இலக்கியங்கள், பரத்தை, காதற், அவள், மருதம், குறுந்தொகை, கூற்று, தலைவன், புதல்வன், உள்ள, வீட்டில், செய்வான், மேவன, ஒழுகினான், எட்டுத்தொகை, சங்க, வாளை, எம்மிற், பெருமொழி