முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 7. பாலை - கண்டோர் கூற்று
குறுந்தொகை - 7. பாலை - கண்டோர் கூற்று
(தலைவனும் தலைவியும் தமரின் நீங்கி உடன்போன காலத்தில் எதிரே வந்தவர்கள், தலைவி காலில் அணிந்திருந்த சிலம்பினால்அவ்விருவரும்க்கும் மணம் நடைபெறவில்லை என்பதை உணர்ந்து இரங்கிக் கூறியது.)
வில்லோன் காலன கழலே தொடியோள் மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர் யார்கொல் அளியர் தாமே ஆரியர் கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி வாகை வெண்ணெற் றொலிக்கும் |
5 |
வேய்பயில் அழுவம் முன்னி யோரே. | |
- பெரும்பதுமனார். |
முடிபு: அழுவம் முன்னியோர் யார் கொல்? அளியர்!
கருத்து: மணம் புரிந்து கொள்ளாத இவர் திறம் இரங்கத் தக்கது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 7. பாலை - கண்டோர் கூற்று, இலக்கியங்கள், பாலை, குறுந்தொகை, கூற்று, கண்டோர், வாகை, அழுவம், இவர், கலங்கி, மேல், காலில், எட்டுத்தொகை, சங்க, மணம், அளியர்