முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 68. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தொகை - 68. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவன் பிரிவினால் வருந்திய தலைவி முன்பனிப்பருவத்தும் அவன் வாராமையால் துன்புற்று, "இப்பனியின் துன்பத்தைத் தீர்ப்பது தலைவருடைய மார்பேயாகும்; ஆதலின் அவர் வாராவிடின் இதனை ஆற்றுதல் அரிது" என்றது.)
பூழ்க்கா லன்ன செங்கால் உழுந்தின் ஊழ்ப்படு முதுகாய் உழையினங் கவரும் அரும்பனி அற்சிரந் தீர்க்கும் மருந்துபிறி தில்லையவர் மணந்த மார்பே. |
|
- அள்ளூர் நன்முல்லையார். |
முடிபு: அச்சிரந் தீர்க்கும் மருந்து அவர் மணந்த மார்பே; பிறிதில்லை.
கருத்து: அவர் உடன் இராமையால் இம் முன்பனிப் பருவம் எனக்குத் துன்பம் தருவதாயிற்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 66 | 67 | 68 | 69 | 70 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 68. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, குறிஞ்சி, அவர், குறுந்தொகை, கூற்று, மணந்த, மார்பே, தீர்க்கும், சங்க, எட்டுத்தொகை, மார்பேயாகும்