முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 67. பாலை - தலைவி கூற்று
குறுந்தொகை - 67. பாலை - தலைவி கூற்று
(தலைவனது பிரிவை ஆற்றாத தலைவி தோழியை நோக்கி, "பிரிந்து சென்ற தலைவர் நம்மை நினையாரோ? நினைப்பின் வந்திருப்பாரன்றே" என்று கூறுயது.)
உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம் புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப் பொலங்கல ஒருகா சேய்க்கும் நிலங்கரி கள்ளியங் காடிறந் தோரே. |
5 |
- அள்ளூர் நன்முல்லையார். |
முடிபு: தோழி, காடிறந்தோர் உள்ளார்கொல்?
கருத்து: தலைவர் என்னை மறந்தனர் போலும்!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 65 | 66 | 67 | 68 | 69 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 67. பாலை - தலைவி கூற்று, பாலை, இலக்கியங்கள், தலைவி, கூற்று, தலைவர், கொண்ட, தோழி, குறுந்தொகை, என்னை, சென்ற, எட்டுத்தொகை, சங்க, நினையாரோ