முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 58. குறிஞ்சி - தலைவன் கூற்று
குறுந்தொகை - 58. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தன்னை இடித்துக் கூறிய பாங்கனை நோக்கி, “எனது காமநோய் பொறுத்தற்கரியதாயிற்று; இதனை நீங்கச் செய்யின் நன்றாகும்” என்று தலைவன் கூறியது.)
இடிக்குங் கேளிர் நுங்குறை ஆக நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற் கையில் ஊமன் கண்ணிற் காக்கும் வெண்ணெய் உணங்கல் போலப் |
5 |
பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே. | |
- வெள்ளி வீதியார். |
முடிபு: கேளிர், நிறுக்கலாற்றின் நன்றுமன்; இந்நோய் பரந்தன்று; நோன்றுகொளற்கரிது.
கருத்து: காமநோய் பொறுத்தற்கரியதாயிற்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 56 | 57 | 58 | 59 | 60 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 58. குறிஞ்சி - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, கேளிர், பொறுத்தற்கரியதாயிற்று, எட்டுத்தொகை, சங்க, காமநோய்