முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 383. பாலை - தோழி கூற்று
குறுந்தொகை - 383. பாலை - தோழி கூற்று
(தலைவனுடன் செல்லத் தலைவி உடம்பட்டமை தெரிந்துஅக்கருத்தைத் தலைவனுக்கு வெளியிட்டபின் அவன் வந்து நிற்ப, அப்பொழுது நாண் அழிதற்கு வருந்திய தலைவியை நோக்கி, “நின்உடம்பாட்டை யறிந்தே அவனை வரச் செய்தேன்; இப்பொழுது மறுப்பின் என்செய்வேன்!” என்று தோழி கூறியது.)
நீயுடம் படுதலின் யான்தர வந்து குறிநின் றனனே குன்ற நாடன் இன்றை யளவை சென்றைக் கென்றி கையுங் காலும் ஓய்வன அழுங்கத் தீயுறு தளிரின் நடுங்கி |
5 |
யாவதும் இலையான் செயற்குரி யதுவே. | |
- படுமரத்து மோசிகீரனார். |
முடிபு: நாடன் நின்றனன்; சென்றைக்கென்றி; அழுங்க நடுங்கிச் செயற்குரியது இலை.
கருத்து: நீ தலைவனுடன் இப்பொழுதே செல்லுதல் நலம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 381 | 382 | 383 | 384 | 385 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 383. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, வந்து, குறுந்தொகை, பாலை, நடுங்கி, நான், காலும், தலைவனுடன், எட்டுத்தொகை, சங்க, நாடன்