முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 382. முல்லை - தோழி கூற்று
குறுந்தொகை - 382. முல்லை - தோழி கூற்று
(தலைவன் கூறிச்சென்ற பருவம் வந்த காலத்து அவன் வாராமையால் வருந்திய தலைவியை நோக்கி, “இது கார்ப்பருவமன்று; இப்பொழுது பெய்வது வம்பமழை” என்று தோழி கூறித் தெளிவித்தது.)
தண்துளிக் கேற்ற பைங்கொடி முல்லை முகைதலைத் திறந்த நாற்றம் புதல்மிசை பூமலி தளவமொடு தேங்கமழ்பு கஞல வம்புப் பெய்யுமால் மழையே வம்பன்று காரிது பருவம் ஆயின் |
5 |
வாரா ரோநம் காத லோரே. | |
- குறுங்கீரனார். |
முடிபு: மழை வம்புப் பெய்யும்; இது கார்ப்பருவமாயின் நம் காதலோர் வாராரோ?
கருத்து: இது கார்ப்பருவம் அன்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 380 | 381 | 382 | 383 | 384 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 382. முல்லை - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, முல்லை, பெய்யும், குறுந்தொகை, கூற்று, வம்புப், வாராரோ, சங்க, எட்டுத்தொகை, பருவம்