முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 377. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தொகை - 377. குறிஞ்சி - தலைவி கூற்று
(“தலைவன் பிரிந்தமையால் என் உடல் மெலியவும் அவனதுஇயல்பு நினைந்து யான் ஆற்றினேன்; நீ ஆற்றாயாதல் என்?” என்றுதலைவி, வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கூறியது.)
மலரேர் உண்கண் மாணலந் தொலைய வளையேர் மென்றோள் ஞெகிழ்ந்ததன் தலையும் மாற்றா கின்றே தோழியாற் றலையே அறிதற் கமையா நாடனொடு செய்து கொண்டதோர் சிறுநன் னட்பே. |
5 |
- மோசி கொற்றனார். |
முடிபு: தோழி, நட்பு மாற்று ஆகின்று; ஆற்றலை,
கருத்து: தலைவனது இயல்பை உணர்ந்து யான் ஆற்றினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 375 | 376 | 377 | 378 | 379 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 377. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், யான், குறிஞ்சி, குறுந்தொகை, தலைவி, கூற்று, தோழி, ஆற்றினேன், எட்டுத்தொகை, சங்க