முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 374. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 374. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவன் வரைவொடு புக்க காலத்துத் தமர் அவனை ஏற்றுக் கொண்டாராக, “யான் அறத்தொடு நிற்றலின் இது நிகழ்ந்தது” என்று தோழி தலைவிக்குக் கூறியது).
எந்தையும் யாயும் உணரக் காட்டி ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின் மலைகெழு வெற்பன் தலைவந் திரப்ப நன்றுபுரி கொள்கையின் ஒன்றா கின்றே முடங்கல் இறைய தூங்கணங் குரீஇ |
5 |
நீடிரும் பெண்ணைத் தொடுத்த கூடினும் மயங்கிய மைய லூரே. |
|
- உறையூர்ப் பல்காயனார். |
முடிபு: உணரக்காட்டிக் கிளந்தபின் வெற்பன் இரப்ப நன்றுபுரி கொள்கையின் ஊர் ஒன்றாகின்று.
கருத்து: யான் அறத்தொடு நின்றமையின் நமர் தலைவனது வரைவுக்கு உடம்பட்டனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 372 | 373 | 374 | 375 | 376 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 374. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, யான், கொள்கையின், நமர், நன்றுபுரி, இரப்ப, தலைவன், எட்டுத்தொகை, சங்க, அறத்தொடு, கிளந்தபின், வெற்பன்