முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 372. நெய்தல் - தோழி கூற்று
குறுந்தொகை - 372. நெய்தல் - தோழி கூற்று
(இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலைவன் சிறைப்புறத்தானாக,தலைவிக்குக் கூறுவாளாய், “இவ்வூரில் அலர் பெருகியது” என்றுதோழி வரைவின் இன்றியமையாமையைப் புலப்படுத்தியது.)
பனைத்தலைக், கருக்குடை நெடுமடல் குருத்தொடு மாயக் கடுவளி தொகுத்த நெடுவெண் குப்பைக் கணங்கொள் சிமைய வணங்குங் கானல் ஆழிதலை வீசிய வயிர்ச்சேற் றருவிக் கூழைபெய் எக்கர்க் குழீஇய பதுக்கை |
5 |
புலர்பதங் கொள்ளா வளவை அலரெழுந் தன்றிவ் வழங்க லூரே. |
|
- விற்றூற்று மூதெயினனார். |
முடிபு: பதுக்கை புலர்பதங் கொள்ளாவளவை இவ்வூரில் அலர் எழுந்தன்று.
கருத்து: இங்கே அலர் மிக்கது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 370 | 371 | 372 | 373 | 374 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 372. நெய்தல் - தோழி கூற்று, இலக்கியங்கள், அலர், நெய்தல், குறுந்தொகை, தோழி, கூற்று, பதுக்கை, புலர்பதங், சங்க, எட்டுத்தொகை, வீசிய