முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 364. மருதம் - இற்பரத்தை கூற்று
குறுந்தொகை - 364. மருதம் - இற்பரத்தை கூற்று
(வேறொரு பரத்தை தன்னைப் புறங்கூறினாளெனக் கேட்ட இற்பரத்தை அப்பரத்தைக்குப் பாங்காயினார் கேட்ப, “மகளிர் துணங்கை யாடும் நாளும், மள்ளர் சேரிப்போர் செய்யும் நாளும் வந்தன; இப்பொழுது தலைவன் வலிய என்பால் அன்பு கொள்ளுதலை அறியலாம்” என்று கூறியது.)
அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற நீர்நாய் வாளை நாளிரை பெறூஉம் ஊரன் பொற்கோல் அவிர்தொடித் தற்கெழு தகுவி எற்புறங் கூறும் என்ப தெற்றென வணங்கிறைப் பணைத்தோள் எல்வளை மகளிர் |
5 |
துணங்கை நாளும் வந்தன அவ்வரைக் கண்பொர மற்றதன் கண்ணவர் மணங்கொளற் கிவரும் மள்ளர் போரே. |
|
- அவ்வையார். |
முடிபு: ஊரன் தகுவி புறங்கூறுமென்ப; தெற்றென நாளும்வந்தன; அதன்கண் மள்ளர்போர் அவர் மணங்கொளற்கு இவரும்.
கருத்து: என்னைத் தலைவனே விரும்பி அடைந்தான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 362 | 363 | 364 | 365 | 366 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 364. மருதம் - இற்பரத்தை கூற்று, இலக்கியங்கள், இற்பரத்தை, வந்தன, நாளும், குறுந்தொகை, கூற்று, மருதம், ஊரன், தெற்றென, வளையையணிந்த, வாளை, தகுவி, துணங்கை, எட்டுத்தொகை, சங்க, பரத்தை, மள்ளர்