முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 363. பாலை - தோழி கூற்று
குறுந்தொகை - 363. பாலை - தோழி கூற்று
(தலைவனாற் பிரிவுணர்த்தப்பட்ட தோழி, “இனியளாகிய தலைவியைப் பிரிந்து செல்லுதல் இன்னாமையைத் தருவது” என்று அவனுக்குக் கூறியது.)
கண்ணி மருப்பின் அண்ணநல் லேறு செங்கோற் பதவின் வார்குரல் கறிக்கும் மடக்கண் மரையா நோக்கிவெய் துற்றுப் புல்லரை உகாஅய் வரிநிழல் வதியும் இன்னா அருஞ்சுரம் இறத்தல் |
5 |
இனிதோ பெரும இன்றுணைப் பிரிந்தே. | |
- செல்லூர்க் கொற்றனார். |
முடிபு: பெரும, துணைப்பிரிந்து சுரம் இறத்தல் இனிதோ?
கருத்து: தலைவியைப் பிரிந்து செல்லுதல் இன்னாது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 361 | 362 | 363 | 364 | 365 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 363. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, பாலை, பெரும, குறுந்தொகை, பிரிந்து, இறத்தல், இனிதோ, உகாஅய், தலைவியைப், எட்டுத்தொகை, சங்க, செல்லுதல்