முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 342. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 342. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவி இற்செறிக்கப்பட்டதை அறிவித்தபோது தலைவன் பின்னும்களவொழுக்கத்தை விரும்பினானாக, “நீ வரையாது ஒழுகின் இவள்வருந்துவாள்; இனி நீ வரைதலே தக்கது” என்று தோழி கூறியது.)
கலைகை தொட்ட கமழ்சுளைப் பெரும்பழம் காவல் மறந்த கானவன் ஞாங்கர்க் கடியுடை மரந்தொறும் படுவலை மாட்டும் குன்ற நாட தகுமோ பைஞ்சுனைக் குவளைத் தண்தழை யிவளீண்டு வருந்த |
5 |
நயந்தோர் புன்கண் தீர்க்கும் பயந்தலைப் படாஅப் பண்பினை எனினே. |
|
- காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார். |
முடிபு: நாட, இவள் வருந்த, பண்பினையெனின் தகுமோ?
கருத்து: நீ இனி இவளை வரைந்து கொள்ள வேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 340 | 341 | 342 | 343 | 344 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 342. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, குறிஞ்சி, குறுந்தொகை, தகுமோ, கூற்று, வருந்த, எட்டுத்தொகை, சங்க, மறந்த