முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 323. முல்லை - தலைவன் கூற்று
குறுந்தொகை - 323. முல்லை - தலைவன் கூற்று
(தான் மேற்கொண்ட வினை முடிந்தவிடத்துத் தலைவன் பாகனைநோக்கி, "தலைவியைப் பிரிந்திருக்கும் நாள் நன்னாளன்று; பயனற்றது;ஆதலின் அவளை யடையும்படி விரைவில் தேர் விடுக" என்பது படச்சொல்லியது.)
எல்லாம் எவனோ பதடி வைகல் பாணர் படுமலை பண்ணிய எழாலின் வானத் தெழுஞ்சுவர் நல்லிசை வீழப் பெய்த புலத்துப் பூத்த முல்லைப் பசுமுகைத் தாது நாறும் நறுநுதல் |
5 |
அரிவை தோளிணைத் துஞ்சிக் கழிந்த நாளிவண் வாழு நாளே. |
|
- பதடி வைகலார். |
முடிபு: அரிவை தோளிணைத் துஞ்சிக் கழிந்த நாள் வாழும் நாள்;எல்லாம் எவனோ? பதடிவைகல்.
கருத்து: விரைவில் தலைவிபாற் போய்ச் சேர்தல் வேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 321 | 322 | 323 | 324 | 325 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 323. முல்லை - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், நாள், குறுந்தொகை, கூற்று, முல்லை, துஞ்சிக், தோளிணைத், நல்ல, வாழும், அரிவை, கழிந்த, எல்லாம், சங்க, எட்டுத்தொகை, விரைவில், எவனோ, பதடி, பெய்த