முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 300. குறிஞ்சி - தலைவன் கூற்று
குறுந்தொகை - 300. குறிஞ்சி - தலைவன் கூற்று
(இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவன் தலைவியை நோக்கி, “நான்நின்னைப் பிரியேன்; பிரியின் ஆற்றேன்” என்றானாக அது கேட்டதலைவி, “பிரிவென்பது ஒன்றும் உண்டாங்கொல்?’ என அஞ்சினாளை,“நீ அஞ்சற்க; நான் இவ்வுலகத்தைப் பெறுவேனாயினும் நின்னைப்பிரியேன்” என அவன் வற்புறுத்தியது.)
குவளை நாறுங் குவையிருங் கூந்தல் |
5 |
யானே, குறுங்கா லன்னங் குவவுமணற் சேக்கும் கடல்சூழ் மண்டிலம் பெறினும் விடல்சூ ழலனான் நின்னுடை நட்பே. |
|
- சிறைக்குடி ஆந்தையார் |
முடிபு: மாஅயோயே, நீ அஞ்சலை; யான் நின்னுடை நட்பு விடல்சூழலன்.
கருத்து: நின்னைப் பிரியேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 298 | 299 | 300 | 301 | 302 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 300. குறிஞ்சி - தலைவன் கூற்று, தலைவன், இலக்கியங்கள், குறிஞ்சி, கூற்று, யான், குறுந்தொகை, நின்னுடை, மலரின், ஆம்பல், பிரியேன், எட்டுத்தொகை, சங்க, குவளை