முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 3. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தொகை - 3. குறிஞ்சி - தலைவி கூற்று
(வரையாது ஒழுகும் தலைவன் வேலிப் புறத்தே நின்றதை அறிந்த தோழி அவன் வரைந்து கொள்ள வேண்டுமென்னும் எண்ணம் உடையவளாகி அவன் செவியில் படும்படி அவனது நட்பைப் பழித்துக் கூறிய போது, தலைவி அந்நட்பு மிகச் சிறப்புடையது என்று உணர்த்தியது.)
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே சாரல் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. |
|
- தேவகுலத்தார். |
முடிபு: நாடனொடு செய்த நட்பு, பெரிது; உயர்ந்தது; அளவினதுஎன்க.
கருத்து: தலைவனொடு செய்த நட்பு மிகச் சிறந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 3. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், குறிஞ்சி, தலைவி, காட்டிலும், குறுந்தொகை, செய்த, கூற்று, உடையது, நட்பு, உயர்ந்தது, அவன், எட்டுத்தொகை, சங்க, மிகச், நாடனொடு