முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 272. குறிஞ்சி - தலைவன் கூற்று
குறுந்தொகை - 272. குறிஞ்சி - தலைவன் கூற்று
(இடித்துரைத்த பாங்கனை நோக்கித் தலைவி பெறுதற்கரியள் என்று தலைவன் கூறியது.)
தீண்டலும் இயைவது கொல்லோ மாண்ட வில்லுடை வீளையர் கல்லிடு பெடுத்த நனந்தலைக் கானத் தினந்தலைப் பிரிந்த புன்கண் மடமா னேர்படத் தன்னையர் சிலைமாண் கடுவிசைக் கலைநிறத் தழுத்திக் |
5 |
குருதியொடு பறித்த செங்கோல் வாளி மாறுகொண் டன்ன வுண்கண் நாறிருங் கூந்தற் கொடிச்சி தோளே. |
|
- ஒருசிறைப் பெரியனார். |
முடிபு: உண் கண்ணையும் கூந்தலையும் உடைய கொடிச்சி தோள் தீண்டலும் இயைவது கொல்!
கருத்து: தலைவி பெறுதற்கரியவள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 270 | 271 | 272 | 273 | 274 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 272. குறிஞ்சி - தலைவன் கூற்று, உடைய, இலக்கியங்கள், தலைவன், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, மாட்சிமைப்பட்ட, கொடிச்சி, கூந்தலையும், பிரிந்த, தலைவி, எட்டுத்தொகை, சங்க, தீண்டலும், இயைவது