முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 270. முல்லை - தலைவன் கூற்று
குறுந்தொகை - 270. முல்லை - தலைவன் கூற்று
(வினைமுற்றி மீண்டு தலைவியோடு இன்புற்ற தலைமகன் மழையைநோக்கி, "நீ நன்றாகப் பெய்வாயாக!" என வாழ்த்தியது.)
தாழிருள் துமிய மின்னித் தண்ணென வீழுறை யினிய சிதறி ஊழிற் கடிப்பிடு முரசின் முழங்கி இடித்திடித்துப் பெய்தினி வாழியோ பெறுவான் யாமே செய்வினை முடித்த செம்ம லுள்ளமோ |
5 |
டிவளின் மேவின மாகிக் குவளைக் குறுந்தாள் நாள்மலர் நாறும் நறுமென் கூந்தல் மெல்லணை யேமே. |
|
- பாண்டியன் பன்னாடுதந்தான். |
முடிபு: யாம் மெல்லணையேம்; பெருவான், இனி மின்னிச் சிதறிஇடித்துப் பெய்து வாழி!
கருத்து: நாம் இன்பம் பெற்றேம்; மழை நன்கு பெய்வதாக!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 268 | 269 | 270 | 271 | 272 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 270. முல்லை - தலைவன் கூற்று, இலக்கியங்கள், உடைய, தலைவன், முல்லை, கூற்று, குறுந்தொகை, பெய்து, மெல்லிய, யாம், செய்வினை, சங்க, முழங்கி, எட்டுத்தொகை