முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 27. பாலை - தலைவி கூற்று
குறுந்தொகை - 27. பாலை - தலைவி கூற்று
(தலைவன் பிரிவினை இவள் ஆற்றாளாயினாள் என்று கவலையுற்ற தோழியை நோக்கித் தலைவி, “நான் ஆற்றியிருப்பவும் என் மாமை யழகு வீணாகும்படி அதனைப் பசலை உண்டது” என்று கூறியது).
கன்று முண்ணாது கலத்தினும் படாது நல்லான் தீம்பால் நிலத்துக் காஅங் கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது பசலை உணீஇயர் வேண்டும் திதலை அல்குலென் மாமைக் கவினே. |
5 |
- வெள்ளிவீதியார். |
முடிபு: பால் நிலத்து உக்காங்குப் பசலை மாமைக்கவினை உணீஇயர் வேண்டும்.
கருத்து: தலைவனது பிரிவினால் மாமைக்கவின் அழியப் பசலை பரந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 27. பாலை - தலைவி கூற்று, இலக்கியங்கள், பசலை, தலைவி, பாலை, குறுந்தொகை, கூற்று, உணீஇயர், வேண்டும், எட்டுத்தொகை, சங்க