முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 25. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தொகை - 25. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவன் நெடுங்காலம் மணம்செய்து கொள்ளாமல் இருத்தல் பற்றி வருந்திய தலைவி, “தலைவர் அருள் பூண்டு என்னை வரைந்து கொண்டால் அன்றி எனக்கு உதவி செய்யத் தக்க சான்று பகர்வார் வேறு ஒருவரும் இலர்” என்று கூறியது).
யாரும் இல்லைத் தானே கள்வன் தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே. |
5 |
- கபிலர். |
முடிபு: தலைவன் மணந்த ஞான்று யாரும் இல்லை; தானே; தான் அது பொய்ப்பின் எவன் செய்வேன்! குருகும் உண்டு.
கருத்து: தலைவன் தான் கூறியபடி இன்னும் வரைந்து கொண்டானல்லன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 23 | 24 | 25 | 26 | 27 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 25. குறிஞ்சி - தலைவி கூற்று, தலைவன், தலைவி, இலக்கியங்கள், குறிஞ்சி, மணந்த, குறுந்தொகை, கூற்று, ஆரல், பொய்ப்பின், குருகும், தான், கள்வன், வேறு, சங்க, எட்டுத்தொகை, வரைந்து, ஒருவரும், யாரும், தானே