முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 266. பாலை - தலைவி கூற்று
குறுந்தொகை - 266. பாலை - தலைவி கூற்று
(தலைவன் வரைந்து கொள்ளாமல் பிரிந்த காலத்தில் வருந்திய தலைவி தோழியை நோக்கி, "அவர் வருவார் என்று தெரிவிக்கும் தூது ஒன்றையும் காணேம்" எனக் கூறியது.)
நமக்கொன் றுரையா ராயினுந் தமக்கொன் றின்னா இரவின் இன்றுணை யாகிய படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ மறப்புரும் பணைத்தோள் மரீஇத் துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே. |
5 |
- நக்கீரனார். |
முடிபு: வல்லியோர் தூது நமக்கு உரையாராயினும் வேங்கைக்கு மறந்தனர் கொல்?
கருத்து: தலைவர் வருதற்குரிய அடையாளம் ஒன்றும் கண்டேமில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 264 | 265 | 266 | 267 | 268 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 266. பாலை - தலைவி கூற்று, இலக்கியங்கள், தூது, தலைவி, கூற்று, குறுந்தொகை, பாலை, தலைவர், மொழியை, நமக்கு, நம்மைப், வேங்கைக்கு, எட்டுத்தொகை, சங்க, மறந்தனர், வல்லியோர்