முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 261. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தொகை - 261. குறிஞ்சி - தலைவி கூற்று
(இரவுக் குறிக்கண் வந்த தலைமகன் சிறைப்புறத்தே இருப்ப அதனை அறிந்த தலைவி தோழிக்குச் சொல்வாளாகி, "தலைவரது வரவை எதிர்நோக்கி வருந்தி இரவெல்லாம் துயின்றிலேன்" என்று கூறி, விரைவில் வரைந்து கோடலே நன்றென்பதைப் புலப்படுத்தியது.)
பழமழை பொழிந்தெனப் பதனழிந் துருகிய சிதட்டுக்கா யெண்ணின் சில்பெயற் கடைநாள் சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான் நள்ளென் யாமத் தையெனக் கரையும் அஞ்சுவரு பொழுதி னானு மென்கண் |
5 |
துஞ்சா வாழி தோழி காவலர் கணக்காய் வகையின் வருந்தியென் நெஞ்சுபுண் ணுற்ற விழுமத் தானே. |
|
- கழார்க் கீரனெயிற்றியார். |
முடிபு: தோழி, வருந்தி உற்ற விழுமத்தான் பொழுதினானும் என்கண் துஞ்சா.
கருத்து: தலைவனது வருகையை நோக்கி நான் இரவில் துயிலாதுஇருந்தேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 259 | 260 | 261 | 262 | 263 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 261. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், உடைய, தலைவி, வருந்தி, கூற்று, குறிஞ்சி, தோழி, குறுந்தொகை, இரவில், சங்க, எட்டுத்தொகை, துஞ்சா