முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 247. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 247. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவன் விரைவில் வரைந்து கொள்வான் என்று தலைவியிடம் தோழி கூறியது.)
எழின்மிக வுடைய தீங்கணிப் படூஉம் திறவோர் செய்வினை அறவ தாகும் கிளையுடை மாந்தர்க்குப் புணையுமா மிவ்வென ஆங்கறிந் திசினே தோழி வேங்கை வீயா மென்சினை வீயுக யானை |
5 |
ஆர்துயில் இயம்பு நாடன் மார்புரித் தாகிய மறுவில் நட்பே. |
|
-சேந்தம் பூதனார். |
முடிபு: தோழி, நாடன் நட்பு எழில் உடையது; அணிப்படூஉம்;வினை அறவதாகும்; இவ் புணையும் ஆம்; ஆங்கு அறிந்திசின்.
கருத்து: தலைவன் நின்னை விரைவில் வரைந்து கொள்வான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 245 | 246 | 247 | 248 | 249 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 247. குறிஞ்சி - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, அங்ஙனம், நாடன், உடைய, வேங்கை, உண்டாகும், தலைவன், எட்டுத்தொகை, சங்க, விரைவில், வரைந்து, கொள்வான்