முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 125. நெய்தல் - தலைவி கூற்று
குறுந்தொகை - 125. நெய்தல் - தலைவி கூற்று
(தலைவன் வரைந்து கொள்ளாமல் நெடுநாள் ஒழுகினானாக வருந்திய தலைவி, அவன் கேட்கும் அண்மையில் இருப்பத்தோழியை நோக்கி, தலைவன் என் நலம் கொண்டான்; அந்நலம் என்னைப் பிரிந்தது. நான் இன்னும் உயிரோடு வாழ்ந்திருக்கின்றேன்” என்று கூறித் தலைவன் வரையாவிடின் உயிர் நீங்குமென்ற குறிப்பை உணர்த்தியது.)
இலங்குவளை நெகிழச் சாஅ யானே உளெனே வாழி தோழி சாரல் தழையணி அல்குல் மகளி ருள்ளும் விழவுமேம் பட்டவென் நலனே பழவிறற் பறைவலந் தப்பிய பைதல் நாரை |
5 |
திரைதோய் வாங்குசினை யிருக்கும் தண்ணந் துறைவனொடு கண்மா றின்றே. |
|
- அம்மூவனார். |
முடிபு: தோழி, என்நலன் துறைவனொடு கண்மாறின்று: யானே சாஅய் இன்னும் உளென்.
கருத்து: தலைவன் விரைவில் வரைந்துகொள்ளாவிடின் உயிர் தரியேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 123 | 124 | 125 | 126 | 127 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 125. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவன், தலைவி, நெய்தல், குறுந்தொகை, இன்னும், தோழி, கூற்று, யானே, துறைவனொடு, நாரை, நலம், எட்டுத்தொகை, சங்க, உயிர்