கலித்தொகை - மருதக் கலி 87
ஒரூஉ நீ; எம் கூந்தல் கொள்ளல் யாம் நின்னை வெரூஉதும், காணுங்கடை; தெரியிழாய்! செய் தவறு இல்வழி, யாங்குச் சினவுவாய், மெய் பிரிந்து, அன்னவர்மாட்டு, ஏடா! நினக்குத் தவறு உண்டோ ? நீ வீடு பெற்றாய்; | 5 |
இமைப்பின் இதழ் மறைபு ஆங்கே கெடுதி; நிலைப் பால் அறியினும், நின் நொந்து நின்னைப் புலப்பார் உடையர், தவறு; அணைத் தோளாய்! தீயாரைப் போல, திறன் இன்று உடற்றுதி; காயும் தவறு இலேன் யான்; | 10 |
மான் நோக்கி! நீ அழ நீத்தவன் ஆனாது நாணிலன்ஆயின், நலிதந்து அவன்வயின் ஊடுதல் என்னோ, இனி; 'இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம்' என்னும் தகையது காண்டைப்பாய், நெஞ்சே! பனி ஆனாப் | 15 |
பாடு இல் கண் பாயல் கொள. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 85 | 86 | 87 | 88 | 89 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தவறு, யாம்