கலித்தொகை - குறிஞ்சிக் கலி 50
வாங்குகோல் நெல்லொடு வாங்கி, வருவைகல், மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும் பிடி, தூங்கு இலை வாழை நளி புக்கு, ஞாங்கர் வருடை மட மறி ஊர்வு இடைத் துஞ்சும் இருள் தூங்கு சோலை, இலங்கு நீர், வெற்ப! | 5 |
அரவின் பொறியும் அணங்கும் புணர்ந்த உரவு வில்மேல் அசைத்த கையை, ஓராங்கு நிரைவளை முன்கை என் தோழியை நோக்கி, படி கிளி பாயும் பசுங் குரல் ஏனல் கடிதல் மறப்பித்தாய்ஆயின், இனி நீ | 10 |
நெடிது உள்ளல் ஓம்புதல் வேண்டும்; இவளே பல் கோட் பலவின் பயிர்ப்பு உறு தீம் கனி அல்கு அறைக் கொண்டு ஊண் அமலைச் சிறுகுடி நல்கூர்ந்தார் செல்வ மகள் நீயே, வளியின் இகல் மிகும் தேரும், களிறும் | 15 |
தளியின் சிறந்தனை வந்த புலவர்க்கு அளியொடு கைதூவலை; அதனால், கடு மா கடவுறூஉம் கோல் போல், எனைத்தும் கொடுமை இலையாவது அறிந்தும், அடுப்பல் | 20 |
வழை வளர் சாரல் வருடை நன் மான் குழவி வளர்ப்பவர் போல, பாராட்டி, உழையின் பிரியின், பிரியும், இழை அணி அல்குல் என் தோழியது கவினே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 48 | 49 | 50 | 51 | 52 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வருடை, தூங்கு