கலித்தொகை - பாலைக் கலி - 35
'மடியிலான் செல்வம் போல் மரன் நந்த, அச் செல்வம் படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப; மாயவள் மேனி போல் தளிர் ஈன், அம் மேனித் தாய சுணங்கு போல் தளிர்மிசைத் தாது உக; மலர் தாய பொழில் நண்ணி மணி நீர கயம் நிற்ப, | 5 |
அலர் தாய துறை நண்ணி அயிர் வரித்து அறல் வார; நனி எள்ளும் குயில் நோக்கி இனைபு உகு நெஞ்சத்தால், துறந்து உள்ளார் அவர்' எனத் துனி கொள்ளல் எல்லா! நீ 'வண்ண வண்டு இமிர்ந்து, ஆனா வையை வார் உயர் எக்கர், தண் அருவி நறு முல்லைத் தாது உண்ணும் பொழுதன்றோ | 10 |
கண் நிலா நீர் மல்கக் கவவி, நாம் விடுத்தக்கால், ஒண்ணுதால்! நமக்கு அவர் "வருதும்" என்று உரைத்ததை; மல்கிய துருத்தியுள் மகிழ் துணைப் புணர்ந்து, அவர், வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுதன்றோ "வலன் ஆக, வினை!" என்று வணங்கி, நாம் விடுத்தக்கால், | 15 |
ஒளியிழாய்! நமக்கு அவர் "வருதும்" என்று உரைத்ததை; நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாடக் கூடலார் புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ பல நாடு நெஞ்சினேம் பரிந்து, நாம் விடுத்தக்கால், சுடரிழாய்! நமக்கு அவர் "வருதும்" என்று உரைத்ததை; | 20 |
என ஆங்கு, உள்ளுதொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பாகி, எள் அறு காதலர் இயைதந்தார் புள் இயல் காமர் கடுந் திண் தேர்ப் பொருப்பன் வாய்மை அன்ன வைகலொடு புணர்ந்தே. | 25 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 33 | 34 | 35 | 36 | 37 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - ", அவர், என்று, போல், உரைத்ததை, வருதும்", நமக்கு, விடுத்தக்கால், நாம், நாவில், தாது, உண்ணும், செல்வம், நண்ணி