கலித்தொகை - பாலைக் கலி - 3
அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும், வறன் நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்பவும்- இறை நில்லா வளை ஓட, இதழ் சோர்பு பனி மல்க, பொறை நில்லா நோயோடு புல்லென்ற நுதல் இவள் விறல் நலன் இழப்பவும், வினை வேட்டாய்! கேஎள், இனி; | 5 |
'உடை இவள் உயிர் வாழாள், நீ நீப்பின்' எனப், பல இடைகொண்டு யாம் இரப்பவும், எம கொள்ளாய்ஆயினை; கடைஇய ஆற்றிடை, நீர் நீத்த வறுஞ் சுனை, அடையொடு வாடிய அணி மலர்-தகைப்பன; 'வல்லை நீ துறப்பாயேல், வகை வாடும் இவள்' என, | 10 |
ஒல் ஆங்கு யாம் இரப்பவும், உணர்ந்தீயாய் ஆயினை; செல்லு நீள் ஆற்றிடைச், சேர்ந்து எழுந்த மரம் வாட, புல்லு விட்டு இறைஞ்சிய பூங்கொடி தகைப்பன; 'பிணிபு நீ விடல் சூழின், பிறழ்தரும் இவள்' எனப், பணிபு வந்து இரப்பவும், பல சூழ்வாய்ஆயினை; | 15 |
துணிபு நீ செலக் கண்ட ஆற்றிடை, அம் மரத்து அணி செல, வாடிய அம் தளிர்-தகைப்பன; எனவாங்கு யாம் நிற் கூறவும் எம கொள்ளாய்ஆயினை; ஆனாது இவள்போல் அருள் வந்தவை காட்டி, | 20 |
மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல், நீ செல்லும் கானம் தகைப்ப, செலவு. |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தகைப்பன, இரப்பவும், யாம், வாடிய, நீள், இவள்&, ஆற்றிடை, கொள்ளாய்ஆயினை, எனப், செல்லும், நில்லா, இவள்