கலித்தொகை - பாலைக் கலி - 28
'பாடல் சால் சிறப்பின் சினையவும், சுனையவும் நாடினர் கொயல் வேண்டா, நயந்து தாம் கொடுப்ப போல், தோடு அவிழ் கமழ் கண்ணி தையுபு புனைவார்கண் தோடுறத் தாழ்ந்து, துறை துறை கவின் பெற, செய்யவள் அணி அகலத்து ஆரமொடு அணி கொள்பு, | 5 |
தொய்யகம் தாழ்ந்த கதுப்புப் போல் துவர் மணல் வையை வார் அவிர் அறல், இடை போழும் பொழுதினான் விரிந்து ஆனா மலராயின், விளித்து ஆலும் குயிலாயின், பிரிந்து உள்ளார் அவராயின், பேதுறூஉம் பொழுதாயின், அரும் படர் அவல நோய் ஆற்றுவள் என்னாது | 10 |
வருந்த, நோய் மிகுமாயின் வணங்கிறை! அளி என்னோ? புதலவை மலராயின், பொங்கரின வண்டாயின், அயலதை அலராயின், அகன்று உள்ளார் அவராயின், மதலை இல் நெஞ்சொடு மதனிலள் என்னாது நுதல் ஊரும் பசப்பாயின் நுணங்கிறை! அளி என்னோ? | 15 |
தோயின அறலாயின், சுரும்பு ஆர்க்கும் சினையாயின், மாவின தளிராயின், மறந்து உள்ளார் அவராயின், பூ எழில் இழந்த கண் புலம்பு கொண்டு அமையாது பாயல் நோய் மிகுமாயின் பைந்தொடி! அளி என்னோ?' என ஆங்கு, | 20 |
ஆயிழாய்! ஆங்கனம் உரையாதி; சேயார்க்கு நாம் தூது மொழிந்தனம் விடல் வேண்டா; நம்மினும் தாம் பிரிந்து உறைதல் ஆற்றலர், பரிந்து எவன் செய்தி வருகுவர் விரைந்தே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 26 | 27 | 28 | 29 | 30 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நோய், உள்ளார், என்னோ, அவராயின், மிகுமாயின், பிரிந்து, தாம், போல், துறை, மலராயின், வேண்டா