கலித்தொகை - பாலைக் கலி - 21
'பால் மருள் மருப்பின், உரல் புரை பாவு அடி, ஈர் நறுங் கமழ் கடாஅத்து, இனம் பிரி ஒருத்தல் ஆறு கடி கொள்ளும் வேறு புலம் படர்ந்து, பொருள்வயிற் பிரிதல் வேண்டும்' என்னும் அருள் இல் சொல்லும், நீ சொல்லினையே; | 5 |
நன்னர் நறு நுதல் நயந்தனை நீவி, நின்னின் பிரியலன், அஞ்சல் ஓம்பு' என்னும் நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே அவற்றுள் யாவோ வாயின? மாஅல் மகனே! 'கிழவர் இன்னோர்' என்னாது, பொருள்தான், | 10 |
பழ வினை மருங்கின் பெயர்பு பெயர்பு உறையும்; அன்ன பொருள்வயிற் பிரிவோய் நின் இன்று இமைப்புவரை வாழாள் மடவோள் அமைக் கவின் கொண்ட தோள் இணை மறந்தே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பெயர்பு, நன்னர், என்னும், பொருள்வயிற்