கலித்தொகை - பாலைக் கலி - 14
'அணை மருள் இன் துயில் அம் பணைத் தட மென் தோள், துணை மலர் எழில் நீலத்து ஏந்து எழில் மலர் உண் கண், மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண் பல், மணம் நாறு நறு நுதல், மாரி வீழ் இருங் கூந்தல், அலர் முலை ஆகத்து, அகன்ற அல்குல், | 5 |
சில நிரை வால் வளை, செய்யாயோ!' என, பல பல கட்டுரை பண்டையின் பாராட்டி, இனிய சொல்லி, இன்னாங்குப் பெயர்ப்பது, இனி அறிந்தேன், அது துனி ஆகுதலே 'பொருள் அல்லால் பொருளும் உண்டோ ?' என, யாழ நின் | 10 |
மருளி கொள் மட நோக்கம், மயக்கப்பட்டு அயர்த்தாயோ? 'காதலார் எவன் செய்ப, பொருள் இல்லாதார்க்கு' என, ஏதிலார் கூறும் சொல் பொருளாக மதித்தாயோ? செம்மையின் இகந்து ஒரீஇப் பொருள் செய்வார்க்கு, அப் பொருள் இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயோ? | 15 |
அதனால், எம்மையும் பொருளாக மதித்தீத்தை; நம்முள் நாம் கவவுக் கை விடப் பெறும் பொருட் திறத்து அவவுக் கைவிடுதம்; அது மனும் பொருளே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பொருள், பொருளாக, நிரை, வீழ், எழில், மலர்