கலித்தொகை - நெய்தற் கலி 125
'கண்டவர் இல்' என, உலகத்துள் உணராதார், தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள், நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், 'அறிபவர் நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை ஆகலின்,' வண் பரி நவின்ற வய மான் செல்வ! | 5 |
நன்கு அதை அறியினும், நயன் இல்லா நாட்டத்தால், 'அன்பு இலை' என வந்து கழறுவல்; ஐய! கேள்; மகிழ் செய் தேமொழித் தொய்யில் சூழ் இள முலை முகிழ் செய முள்கிய தொடர்பு, அவள் உண்கண் அவிழ் பனி உறைப்பவும், நல்காது விடுவாய்! | 10 |
இமிழ் திரைக் கொண்க! கொடியைகாண் நீ இலங்கு ஏர் எல் வளை ஏர் தழை தைஇ, நலம் செல நல்கிய தொடர்பு, அவள் சாஅய்ப் புலந்து அழ, புல்லாது விடுவாய்! இலங்கு நீர்ச் சேர்ப்ப! கொடியைகாண் நீ; | 15 |
இன் மணிச் சிலம்பின் சில் மொழி ஐம்பால் பின்னொடு கெழீஇய தட அரவு அல்குல் நுண் வரி வாட, வாராது விடுவாய்! தண்ணந் துறைவ! தகாஅய்காண் நீ; என ஆங்கு | 20 |
அனையள் என்று, அளிமதி, பெரும! நின் இன்று இறை வரை நில்லா வளையள் இவட்கு, இனிப் பிறை ஏர் சுடர் நுதற் பசலை மறையச் செல்லும், நீ மணந்தனை விடினே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 123 | 124 | 125 | 126 | 127 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - விடுவாய், இலங்கு, கொடியைகாண், தொடர்பு, அவள்