கலித்தொகை - பாலைக் கலி - 11
'அரிதாய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும், பெரிதாய பகை வென்று பேணாரைத் தெறுதலும், புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும்' என, பிரிவு எண்ணிப் பொருள்வயிற் சென்ற நம் காதலர் வருவர்கொல்; வயங்கிழாஅய்! வலிப்பல், யான்; கேஎள், இனி: | 5 |
'அடி தாங்கும் அளவு இன்றி, அழல் அன்ன வெம்மையால், கடியவே' கனங் குழாஅய்! 'காடு' என்றார்; 'அக் காட்டுள், துடி அடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப் பிடி ஊட்டி, பின் உண்ணும், களிறு' எனவும் உரைத்தனரே 'இன்பத்தின் இகந்து ஒரீஇ, இலை தீந்த உலவையால், | 10 |
துன்புறூஉம் தகையவே காடு' என்றார்; 'அக் காட்டுள், அன்பு கொள் மடப் பெடை அசைஇய வருத்தத்தை மென் சிறகரால் ஆற்றும், புறவு' எனவும் உரைத்தனரே 'கல் மிசை வேய் வாடக் கனை கதிர் தெறுதலான், துன்னரூஉம் தகையவே காடு' என்றார்; 'அக் காட்டுள், | 15 |
இன் நிழல் இன்மையான் வருந்திய மடப் பிணைக்குத் தன் நிழலைக் கொடுத்து அளிக்கும், கலை' எனவும் உரைத்தனரே என ஆங்கு இனை நலம் உடைய கானம் சென்றோர் புனை நலம் வாட்டுநர்அல்லர்; மனைவயின் | 20 |
பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன; நல் எழில் உண்கணும் ஆடுமால், இடனே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - உரைத்தனரே, காடு&, எனவும், காட்டுள், என்றார், நலம், தகையவே, மடப்