கலித்தொகை - முல்லைக் கலி 107
எல்லா! இஃது ஒன்று கூறு குறும்பு இவர் புல்லினத்தார்க்கும், குடம் சுட்டவர்க்கும், 'எம் கொல் ஏறு கோடல் குறை' என, கோவினத்தார் பல் ஏறு பெய்தார் தொழூஉ; தொழுவத்து, | 5 |
சில்லைச் செவி மறைக் கொண்டவன் சென்னிக் குவி முல்லைக் கோட்டம் காழ் கோட்டின் எடுத்துக்கொண்டு, ஆட்டிய ஏழை இரும் புகர் பொங்க, அப் பூ வந்து என் கூழையுள் வீழ்ந்தன்று மன்; அதனை, கெடுத்தது பெற்றார் போல், கொண்டு யான் முடித்தது | 10 |
கெட்டனள், என்பவோ, யாய்; இஃதொன்று கூறு; கேட்டால், எவன் செய்ய வேண்டுமோ? மற்று, இகா! அவன் கண்ணி அன்றோ, அது; 'பெய் போது அறியாத் தன் கூழையுள் ஏதிலான் | 15 |
கை புனை கண்ணி முடித்தாள், என்று, யாய் கேட்பின், செய்வது இலாகுமோ மற்று; எல்லாத் தவறும் அறும்; ஓஒ! அஃது அறுமாறு; 'ஆயர் மகன் ஆயின், ஆய மகள் நீ ஆயின், | 20 |
நின் வெய்யன்ஆயின், அவன் வெய்யை நீ ஆயின், நின்னை நோதக்கதோ இல்லைமன்' 'நின் நெஞ்சம், அன்னை நெஞ்சு, ஆகப் பெறின்' அன்னையோ, ஆயர் மகனையும் காதலை, கைம்மிக ஞாயையும் அஞ்சுதிஆயின், அரிதுஅரோ | 25 |
நீ உற்ற நோய்க்கு மருந்து; மருந்து இன்று யான் உற்ற துயர் ஆயின் எல்லா! வருந்துவேன் அல்லனோ, யான்; வருந்தாதி; மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏற அவன் | 30 |
கண்ணி தந்திட்டது எனக் கேட்டு, 'திண்ணிதா, தெய்வ மால், காட்டிற்று இவட்கு' என, நின்னை அப் பொய் இல் பொதுவற்கு அடை சூழ்ந்தார் தந்தையோடு ஐயன்மார் எல்லாம் ஒருங்கு. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 105 | 106 | 107 | 108 | 109 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - ஆயின், கண்ணி, நின், யான், கூழையுள், மருந்து, உற்ற, ஆயர், நின்னை, அவன், எல்லா, கூறு, யாய், மற்று, முல்லைக்