அகநானூறு - 299. பாலை
எல்லையும் இரவும், வினைவயின் பிரிந்த முன்னம், முன் உறுபு அடைய உள்ளிய பதி மறந்து உறைதல் வல்லினம் ஆயினும், அது மறந்து உறைதல் அரிது ஆகின்றே கடு வளி எடுத்த கால் கழி தேக்கிலை |
5 |
நெடு விளிப் பருந்தின் வெறி எழுந்தாங்கு, விசும்பு கண் புதையப் பாஅய், பல உடன் அகல் இடம் செல்லுநர் அறிவு கெடத் தாஅய், கவலை கரக்கும் காடு அகல் அத்தம், செய் பொருள் மருங்கின் செலவு தனக்கு உரைத்தென, |
10 |
வைகு நிலை மதியம் போல, பையென, புலம்பு கொள் அவலமொடு, புதுக் கவின் இழந்த நலம் கெழு திருமுகம் இறைஞ்சி, நிலம் கிளையா, நீரொடு பொருத ஈர் இதழ் மழைக் கண் இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்ப, |
15 |
கால் நிலைசெல்லாது, கழி படர்க் கலங்கி, நா நடுக்குற்ற நவிலாக் கிளவியொடு, அறல் மருள் கூந்தலின் மறையினள்,' திறல் மாண்டு திருந்துகமாதோ, நும் செலவு' என வெய்து உயிரா, பருவரல் எவ்வமொடு அழிந்த |
20 |
பெரு விதுப்புறுவி பேதுறு நிலையே. |
இடைச் சுரத்துப் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -எயினந்தை மகனார் இளங்கீரனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 297 | 298 | 299 | 300 | 301 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - அகல், கால், உறைதல், மறந்து