அகநானூறு - 298. குறிஞ்சி
| பயம் கெழு திருவின் பல் கதிர் ஞாயிறு வயங்கு தொழில் தரீஇயர், வலன் ஏர்பு விளங்கி, மல்கு கடல் தோன்றியாங்கு, மல்கு பட, மணி மருள் மாலை, மலர்ந்த வேங்கை ஒண் தளிர் அவிர் வரும் ஒலி கெழு பெருஞ் சினைத் |
5 |
| தண் துளி அசைவளி தைவரும் நாட! கொன்று சினம் தணியாது, வென்று முரண் சாம்பாது, இரும் பிடித் தொழுதியின் இனம் தலைமயங்காது, பெரும் பெயற் கடாஅம் செருக்கி, வள மலை இருங் களிறு இயல்வரும் பெருங் காட்டு இயவின், |
10 |
| ஆர் இருள் துமிய வெள் வேல் ஏந்தி, தாழ் பூங் கோதை ஊது வண்டு இரீஇ, மென் பிணி அவிழ்ந்த அரை நாள் இரவு, இவண் நீ வந்ததனினும், இனிது ஆகின்றே தூவல் கள்ளின் துனை தேர், எந்தை |
15 |
| கடியுடை வியல் நகர் ஓம்பினள் உறையும் யாய் அறிவுறுதல் அஞ்சி, பானாள், காவல் நெஞ்சமொடு காமம் செப்பேன், யான் நின் கொடுமை கூற, நினைபு ஆங்கு, இனையல் வாழி, தோழி! நத் துறந்தவர் |
20 |
| நீடலர் ஆகி வருவர், வல்லென; கங்குல் உயவுத் துணை ஆகிய துஞ்சாது உறைவி இவள் உவந்ததுவே! |
இரவுக்குறிக்கண் தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. - மதுரை பண்ட வாணிகன் இளந்தேவனார்
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 296 | 297 | 298 | 299 | 300 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - மல்கு, கெழு

