அகநானூறு - 272. குறிஞ்சி
| இரும் புலி தொலைத்த பெருங் கை வேழத்துப் புலவு நாறு புகர் நுதல் கழுவ, கங்குல் அருவி தந்த அணங்குடை நெடுங் கோட்டு அஞ்சு வரு விடர் முகை ஆர் இருள் அகற்றி, மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்க, |
5 |
| தனியன் வந்து, பனி அலை முனியான், நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி அசையா நாற்றம் அசை வளி பகர, துறு கல் நண்ணிய கறி இவர் படப்பைக் |
10 |
| குறி இறைக் குரம்பை நம் மனைவயின் புகுதரும், மெய்ம் மலி உவகையன்; அந் நிலை கண்டு, 'முருகு' என உணர்ந்து, முகமன் கூறி, உருவச் செந் தினை நீரொடு தூஉய், நெடு வேள் பரவும், அன்னை; அன்னோ! |
15 |
| என் ஆவது கொல்தானே பொன் என மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய மணி நிற மஞ்ஞை அகவும் அணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே? |
இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 270 | 271 | 272 | 273 | 274 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -

