அகநானூறு - 270. நெய்தல்
இருங் கழி மலர்ந்த வள் இதழ் நீலம், புலாஅல் மறுகின் சிறுகுடிப் பாக்கத்து இன மீன் வேட்டுவர், ஞாழலொடு மிலையும் மெல் அம் புலம்ப! நெகிழ்ந்தன, தோளே; சேயிறாத் துழந்த நுரை பிதிர்ப் படு திரை |
5 |
பராஅரைப் புன்னை வாங்கு சினைத் தோயும் கானல்அம் பெருந் துறை நோக்கி, இவளே, கொய் சுவற் புரவிக் கை வண் கோமான் நல் தேர்க் குட்டுவன் கழுமலத்து அன்ன, அம் மா மேனி தொல் நலம் தொலைய, |
10 |
துஞ்சாக் கண்ணள் அலமரும்; நீயே, கடவுள் மரத்த முள் மிடை குடம்பைச் சேவலொடு புணராச் சிறு கரும் பேடை இன்னாது உயங்கும் கங்குலும், நும் ஊர் உள்ளுவை; நோகோ, யானே. |
15 |
பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது. -சாகலாசனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 268 | 269 | 270 | 271 | 272 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -