அகநானூறு - 137. பாலை
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட சிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ, களிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம் சென்று சேர்பு ஒல்லார்ஆயினும், நினக்கே வென்று எறி முரசின் விறற் போர்ச் சோழர் |
5 |
இன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண், வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழிற் பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள், வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில் |
10 |
தீ இல் அடுப்பின் அரங்கம் போல, பெரும் பாழ்கொண்டன்று, நுதலே; தோளும், தோளா முத்தின் தெண் கடற் பொருநன் திண் தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன் நல் எழில் நெடு வேய் புரையும் |
15 |
தொல் கவின் தொலைந்தன; நோகோ யானே. |
'தலைமகன் பிரியும்' எனக் கருதி வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.- உறையூர் முதுகூத்தனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 135 | 136 | 137 | 138 | 139 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -