அகநானூறு - 135. பாலை
திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க, புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்பப் பசலை பாய்ந்த நுதலேன் ஆகி, எழுது எழில் மழைக் கண் கலுழ, நோய் கூர்ந்து, ஆதிமந்தியின் அறிவு பிறிதுஆகி, |
5 |
பேதுற்றிசினே காதல்அம் தோழி! காய்கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி, ஆடுதளிர் இருப்பைக் கூடு குவி வான் பூ, கோடு கடை கழங்கின், அறைமிசைத் தாஅம் காடு இறந்தனரே, காதலர்; அடுபோர், |
10 |
வீயா விழுப் புகழ், விண் தோய் வியன் குடை, ஈர் எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த கழுவுள் காமூர் போலக் கலங்கின்றுமாது, அவர்த் தௌந்த என் நெஞ்சே. |
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றது. - பரணர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 133 | 134 | 135 | 136 | 137 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -