அகநானூறு - 13. பாலை
தன் கடற் பிறந்த முத்தின் ஆரமும், முனை திறை கொடுக்கும் துப்பின், தன் மலைத் தெறல் அரு மரபின் கடவுட் பேணி, குறவர் தந்த சந்தின் ஆரமும், இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும் |
5 |
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன் குழியில் கொண்ட மராஅ யானை மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது, வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும், வள் வாய் அம்பின், கோடைப் பொருநன் |
10 |
பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின், விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு, கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து, சாயல் இன் துணை இவட் பிரிந்து உறையின், நோய் இன்றாக செய்பொருள்! வயிற்பட |
15 |
மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை, கவவு இன்புறாமைக் கழிக வள வயல், அழல் நுதி அன்ன தோகை ஈன்ற கழனி நெல் ஈன் கவைமுதல் அலங்கல் நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையாத் துயல்வர, |
20 |
புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை, இலங்கு பூங் கரும்பின் ஏர் கழை இருந்த வெண் குருகு நரல, வீசும் நுண் பல் துவலைய தண் பனி நாளே! |
பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகனைத் தோழி செலவழுங்குவித்தது; உடம்பட்ட தூஉம் ஆம். - பெருந்தலைச் சாத்தனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - ஆரமும், கொள், பொழுது