விலங்கியல் :: உடலின் மண்டலங்கள்

301. விழித்திரையின் சிறப்பென்ன?
இது நரம்புத்திரை. இதில்தான் பொருளின் உருவம் விழுகிறது.
302. கண்மணி என்பது யாது? இதன் வேலை என்ன?
கண்ணின் கருவிழிப் படலத்திலுள்ள துளை. ஒளி உட்செல்வதைக் கட்டுபடுத்துவது.
303. ஒரு பொருளை நாம் எவ்வாறு பார்க்கிறோம்?
விழித்திரையிலுள்ள கோல்களும் கூம்புகளும் ஒளியாற்றலை நரம்பாற்றலாக மாற்றுகின்றன. இதைப் பார்வை நரம்பு மூளைக்குத் தெரிவிக்கும் பொழுது, நாம் பொருளின் உருவை உணர்கிறோம்.
304. கண்தக அமைதல் என்றால் என்ன?
பொருள்களின் தொலைவிற்கேற்ப விழிவில்லையின் பருமன் கூடிக்குறைகிறது. சிறப்பாக, அருகிலுள்ள பொருள்களின் பிம்பம் திரையிள் விழிக்குவியத் தொலைவு குறையுமாறு விழிவில்லையின் பருமன் அதிகமாவதற்குச் கண்தக அமைதல் என்று பெயர். இதற்குக் குற்றிழைத்தசை உதவுகிறது.
305. கண்ணில் எங்குப் பிம்பம் உண்டாகிறது?
மூன்றாம் திரையான விழித்திரையில்.
306. குவியாப்பார்வை என்றால் என்ன?
கண் குறைபாடு வில்லை மூலம் ஒளிக்கதிர்கள் ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு ஒரே சமயத்தில் குவியாத நிலை. கதிர்கள் கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் செல்லும்.
307. நிறப்பிறழ்ச்சி நீக்கி என்றால் என்ன?
நிறப் பிறழ்ச்சியைப் போக்கும் கண்ணாடி வில்லை.
308. நிறப்பிறழ்ச்சி நீக்கு ஆய்வு என்றால் என்ன?
நிறப்பிறழ்ச்சியைப் போக்கச் செய்யும் சிறிய ஆய்வு.
309. நிறப்பார்வை என்றால் என்ன?
இது ஒரு பார்வைக் குறைபாடு. நிறமற்ற பொருள்கள் நிறமுள்ளபொருள் போல தெரியும். நிறங்கள் நிறைவாக வெளிப்படா.
310. குருட்டுப்புள்ளி என்றால் என்ன?
விழித்திரையில் பார்வை நரம்பு நுழையும் புள்ளி. இப்புள்ளிக்கு ஒளியுணர்வு இல்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உடலின் மண்டலங்கள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால்