ஸ்கந்த புராணம் - பகுதி 9 - பதினெண் புராணங்கள்
சுவேதாவின் கதை
சுவேதா என்ற மன்னன் சிறந்த சிவ பக்தன். சிவ பூஜையிலும், தியானத்திலும் பெரும் பொழுதைக் கழிக்கும் அவன் இறுதிநாளும் வந்தது. யமபடர்கள் அவனை அழைத்துப் போக வந்தனர். ஆனால் அவன் கோயிலுக்குள் தியானத்தில் அமர்ந்திருந்தான். ஆனால் யமபடர்கள் கோயிலுக்குள் செல்ல அஞ்சி வெளியே நின்றனர். அவர்கள் வராதது கண்ட யமன் தானே அங்கு வந்து சேர்ந்தான். கடமையைச் செய்யாத யம படர்களைக் கண்டித்து விட்டு உள்ளே சென்று சுவேதாவின் ஆவியைப் பறிக்கப் போனான். ஆனால் சிவலிங்கத்திலிருந்து வெளிப்பட்ட சிவன் தன் நெற்றிக்கண்ணைத் திறந்து யமனை எரித்து விட்டார். இதுவரையில் தியானத்தில் ஆழ்ந்திருந்த சுவேதா நடந்தவற்றை அறியவில்லை. இந்தக் களேபரத்தில் கண்விழித்த சுவேதா நடந்ததை அறிந்து சிவனிடம் ‘ஐயனே! தாங்கள் செய்தது முறையா? எல்லோருடைய காலத்தையும் கணக்கிட்டுக் கொண்டு போவதால் தானே இவனுக்குக் காலன் என்ற பெயர் வந்தது. அவன் கடமையை அவன் செய்ததற்காக அவனை எரிக்கலாமா? காலன் இல்லாத உலகம் பயங்கரமாகப் பெருகிக் கொண்டே போய்விடும். தயவுசெய்து அவனை எழுப்பி அவன் கடமையைச் செய்யுமாறு பணிக்க வேண்டும்” என்று வேண்டிக் கொண்டான். சிவனும் சிரித்துக் கொண்டே யமனை எழுப்பி விட்டார். காலன் சுவேதாவிற்கு நன்றி பாராட்டிவிட்டுச் சென்றார். (தமிழ் நாட்டில் இக்கதை போலவே வழங்கும் மார்க்கண்டன் கதையும், திருக்கடவூரில் இந்திகழ்ச்சி நடந்ததாகச் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டுக் கதையில் சிவன், காவனைக் காவால் உதைத்தான் என்றுதான் கூறப்படுகிறது.)
ஒருமுறை கந்தமாதனத்தில் சிவனும் பார்வதியும் அமைதியாக அமர்ந்திருந்தனர். அவ்விடத்திற்கு வந்த நாரதர் பார்வதியைப் பார்த்து நீங்கள் இவ்வாறு பொழுது போக்குவதற்காகச் சூதாட்டத்தில் ஈடுபட்டால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்றார். அவருடைய பேச்சைக் கேட்டுச் சூதாட்டத்தில் நாட்டம் கொண்ட பார்வதியும் சிவனும் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். நாரதர் சிவனுக்குதவியாக இருக்க சிவனும் பார்வதியும் விளையாடினர். நாரதர் சூழ்ச்சியால் ஒரு சிறிய தந்திரத்தைக் கையாண்டு சிவன் வென்றுவிட்டார். பார்வதிக்கு எல்லையில்லாத் துயரம் உண்டாயிற்று. குறுக்கே புகுந்த நாரதர், இது என்ன பிரமாதம் இந்த மூன்று உலகத்தில் சிவனை வெல்வார் யாருமில்லை. ஆகவே அவரிடம் தோற்ப தென்பது பெரிய அவமானமன்று என்று தூபம் போட்டார். மறுபடி ஒருமுறை ஆடவேண்டும் என்று முடிவு செய்து ஆடத் தொடங்கினர். இம்முறை சூதாட்டத்தில் பார்வதி வென்று விட்டார். சிவனையும், நாரதரையும் பார்த்து ஏதோ வெல்லவே முடியாது என்று கூறினர்களே, இப்பொழுது என்னவாயிற்று என்று பார்த்தீர்களா? பார்வதி ஆகிய நானில்லாமல் சிவன் ஒன்றும் செய்துவிட முடியாது. இவருக்கு இந்நிலையைத் தந்ததே நான்தான் என்றுகூறி, தான் ஜெயித்ததற்கு அடையாளமாகச் சிவன் முடியிலிருந்த சந்திரன் முதலானவற்றைப் பந்தயப் பொருளாகப் பெற்றுக் கொண்டார். இந்த நிலையில் பிருங்கி முனிவர் அங்கு வந்து “தாயே! நீங்கள் பேசுவது நியாயமில்லை. எந்த உலகத்திலும் சிவனை வென்றவர் யாருமில்லை. இமவான் புத்திரியான தாங்கள் பல காலம் தவம் செய்து சிவனை அடைந்ததை மறந்து விட்டீர்களா? இதற்கு முன்பிறவியில் தட்சன் மகளாகப் பிறந்தது நினைவில்லையா? யாக சாலையில் பலருடைய முன்னிலையில் சிவனை அவன் இழித்துப் பேசினான். அதை என்னால் \ பொறுக்க முடியவில்லை என்று சொல்லிக் கொண்டுதானே யாக குண்டத்தில் விழுந்து உயிரை விட்டீர்கள். அப்படி இருக்க இப்பொழுது சிவனைக் குறை கூறுவது
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்கந்த புராணம் - பகுதி 9 - Skanda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, அவன், சிவன், சிவனும், நாரதர், சூதாட்டத்தில், சிவனை, பார்வதியும், காலன், அவனை, விட்டார், சுவேதா