ஸ்கந்த புராணம் - பகுதி 11 - பதினெண் புராணங்கள்
விஸ்வகர்மாவின் மகன் விஸ்வரூபனைக் கொன்ற தோஷத்தில் இருந்து இந்திரன் தப்பித்துக் கொண்டாலும், விஸ்வகர்மா இந்திரனை மன்னிக்கத் தயாரில்லை. தன் மகனைக் கொன்றதற்கு இந்திரனைப் பழிவாங்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த விஸ்வகர்மா மிகப் பெரிய தவத்தில் ஈடுபட்டான். பிரம்மன் எதிர்ப்பட்ட பொழுது இந்திரனைக் கொல்லத் தனக்கு ஒரு பிள்ளை வேண்டும் என்று விஸ்வகர்மா கேட்க, பிரம்மன் அப்படியே ஆகட்டும் என்றார். அதன் பயனாகப் பிறந்தவன்தான் விருத்திரன். சிறு குழந்தையாகப் பிறந்தவுடனேயே நாள் ஒன்றுக்கு மூன்று வில் உயரம் வளர்ந்தான். பயங்கரமான வடிவுடன் திகழ்ந்தான். சிவனைக் குறித்துப் பெரும் தவம் செய்து நினைத்தற்கரிய பேராற்றலைப் பெற்றான். இந்திரனுடன் போருக்குச் சென்றபொழுது இந்திரனைச் சேர்ந்த அனைவரும் விருத்திரன் எதிரே நிற்க முடியாமல் ஓடிவிட்டனர். இந்திரன் மட்டும் நின்று வஜ்ராயுதத்தை அவன் மேல் ஏவ, அதை எளிதாகக் கையில் பிடித்த விருத்திரன் மறுபடியும் இந்திரன் மேல் அதை வீசினான். வஜ்ராயுதம் இடியோசையுடன் சென்று இந்திரன் நெஞ்சைத் தாக்க அவன் கீழே விழுந்தான். இப்படிப் பலமுறை விருத்திரனிடம் தோற்ற இந்திரன் கடைசியாகச் சூழ்ச்சி செய்து விருத்திரனிடம் நட்பு பாராட்டுவது போல் பொய் நட்புக் கொண்டு, இறுதியில் சூழ்ச்சியாலேயே அவனைக் கொன்று விட்டான்.
கந்த புராணத்தில் வரும் இக்கதையில் விருத்திரன், இந்திரன் ஆகிய இருவரும் பிரதோஷத்தன்று போரிட நேரிட்டது என்றும், விருத்திரன் விரதத்தில் தவறு செய்ததால் இறக்க நேர்ந்தது என்றும் கூறப்படுகிறது.
முன்னொரு காலத்தில் விரோசனன் என்ற அசுரனுக்கு பலி மகனாகப் பிறந்தான். குலகுருவாகிய சுக்ராச்சாரியாரை வைத்துக் கொண்டு மிகப் பெரிய யாகம் ஒன்று செய்ய அந்த யாக குண்டத்தில் இருந்து அற்புதமான நான்கு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய ஒரு ரதம் வந்தது. அதில் ஏறிக் கொண்டு தேவருலகத்தை வென்று இந்திரனை விரட்டி விட்டான். தேவர்கள் மனித உருத்தாங்கி உலகத்தில் திரியலாயினர். இந்திரப் பதவியில் அமர்ந்த பலி இயல்பாகவே வள்ளல் குணம் படைத்தவன் ஆதலால் யார் எது கேட்டாலும் இல்லை என்னாது கொடுக்கும் இயல்புடையவன். இந்தக் குணம் அவனது பூர்வ ஜென்ம வாசனையால் வந்தது.
பலி முன்ஜென்மத்தில் கிட்டவா என்ற பெயருடன் வாழ்ந்தான். எல்லாத் தீமைகளுக்கும் ஒரு கொள்கலமாக வாழ்ந்தான் என்றாலும், ஒருமுறை பூக்கள், கோயிலில் புகை போகும் வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றைக் கையில் எடுத்துக் கொண்டு நடந்து சென்ற பொழுது கால் இடறிக் கீழே விழுந்தான். ஆனால் உடனே இறந்துவிடவில்லை. சில நேரம் கழித்துத்தான் அவனுயிர் பிரிந்தது. அப்படிப் பிரிவதற்கு முன்னர் அவன் அந்தப் பூக்களையும், வாசனைத் திரவியங் களையும் கொண்டு மனத்தினால் சிவபூஜை செய்தான். சிவபூஜையில் ஈடுபட்டபடியே உயிர் துறந்தான். ஆதலின் மூன்று மணிநேரத்திற்கு இந்திரப் பதவியில் இருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அது முடிந்ததும் அவன் நரகத்திற்குப் போக வேண்டும் என்று எண்ணிய நாரதர் மெள்ள அவனிடம் வந்து, இந்திராணியைக் கூப்பிட்டு உன் பக்கத்தில் வைத்துக் கொள் என்று புத்திமதி கூறினார். ஆனால் கிட்டவா பிறர் மனைவியை விரும்பாதவன். அன்றியும் எல்லையற்ற கொடைத் தன்மை உடையவன் ஆதலால் இந்திரப் பதவிக்குரிய ஐராவதம் என்ற யானை, உச்சைச்சிரவம் என்ற குதிரை, சுரபி என்ற காமதேனு ஆகிய மூன்றையும் முறையே அகஸ்தியர், விஸ்வா மித்திரர் வசிட்டர் ஆகிய மூவருக்கும் தானமாகக் கொடுத்து விட்டான். அவன் இந்திரப் பதவியை விட்டுப் போனவுடன், பழைய இந்திரன் பதவிக்கு வந்தான். தான் மிகவும் விரும்பி வைத்திருந்த யானை, குதிரை, பசு இந்த மூன்றும் கொடுக்கப் பட்டு விட்டதை அறிந்த இந்திரன் அந்த முனிவர்களை அழைத்து அவற்றைத் திருப்பித் தருமாறு கேட்டான். எந்தப் பொருளிலும்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்கந்த புராணம் - பகுதி 11 - Skanda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, இந்திரன், கொண்டு, விருத்திரன், அவன், இந்திரப், ஆகிய, விட்டான், விஸ்வகர்மா, வேண்டும்