ஞான ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 7
2 புணர்ச்சி இன்பத்திலும் ஆணொருவனின் வித்தாலும் கருவாகி, இரத்தம் உறைந்து பத்து மாதங்களில் நான் உருவானேன்.
3 நான் பிறந்ததும் எல்லாரையும் போல் மூச்சு விட்டேன், அவர்களைப் போலவே நானும் நிலத்தில் கிடந்தேன், பிள்ளைகள் எல்லாம் அழுவது போல முதலில் நானுந்தான் அழுதேன்.
4 துணிகளால் போர்த்தி அக்கறையோடு என்னை வளர்த்தார்கள்@
5 அரசர்களுள் எவரும் வேறு வகையில் வாழ்வைத் தொடங்கவில்லை.
6 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், இறப்பும் அனைவர்க்கும் ஒரு தன்மைத்தே.
7 ஆகையால் நான் மன்றாடிக் கேட்டேன், எனக்கு அறிவு வழங்கப்பட்டது@ கடவுளிடம் வேண்டிக் கொண்டேன், ஞான உணர்வு எனக்குக் கிடைத்தது@
8 செங்கோல்கள், அரியணைகளினும் மேலாக அதை மதித்தேன், அதனோடு ஒப்பிட்டால் செல்வப் பெருக்கு ஒன்றுமேயில்லை எனக் கருதினேன்.
9 விலையுயர்ந்த மாணிக்கத்தையும் நான் அதற்கு ஒப்பிடவில்லை@ ஏனெனில் பொன்னெல்லாம் அதன் முன் சிறு மணல் தான்@ வெள்ளியும் அதனோடு ஒப்பிட்டால் களிமண் தான்.
10 உடல் நலம், அழகு இவற்றினும் மிகுதியாய் அதன் மேல் அன்பு கொண்டேன், ஒளியை விட அதுவே சிறந்ததென்று தேர்ந்து கொண்டேன், ஏனெனில் அதனுடைய சுடர் என்றென்றைக்கும் குன்றாது.
11 அதனுடன் எனக்கு எல்லா நன்மைகளும் கிடைத்தன, அதன் கையால் அளவற்ற செல்வம் உண்டாயிற்று.
12 அவற்றையெல்லாம் நான் துய்த்து இன்பம் கண்டேன், ஏனெனில் ஞானமே அவற்றை நடத்தி வந்தது, ஆயினும் அதுவே அவற்றின் தாய் என்பதை அறியாதிருந்தேன்.
13 கபடின்றி நான் அதைக் கற்றேன், தாராளமாய்ப் பிறருக்கு வழங்குகிறேன்@ அதனால் உண்டாகும் நன்மைகளை நான் மறைக்கிறதில்லை.
14 ஞானம் மனிதர்க்குக் குன்றாத கருவூலம்@ அதைப் பெறுகிறவர்கள் கடவுளின் நட்பைப் பெறுவார்கள்@ ஏனெனில் அதன் படிப்பினையின் கொடைகளால் அவருக்கு உகந்தவர்களாகிறார்கள்.
15 அறிவுடைமைக்கேற்பப் பேசவும், பெற்றுக் கொண்ட வரங்களுக்கேற்பச் சிந்திக்கவும் கடவுள் எனக்கு அருள்புரிவாராக! ஞானத்திற்கும் அவர் தான் வழிகாட்டி@ ஞானிகளையும் அவரே திருத்துகிறவர்.
16 அறிவுத்திறன்கள் தொழிற்திறமைகள் அனைத்தும் போலவே, நாமும் நம் சொற்களும் அவர் கைகளில் தான் இருக்கிறோம்.
17 உலகில் உண்டானவற்றின் உண்மையான அறிவை எனக்குக் கொடுத்தவர் அவரே@ உலகின் அமைப்பையும், மூலப்பொருட்களின் ஆற்றலையும் நான் அறியச் செய்தவரும் அவரே.
18 காலத்தின் தொடக்கம், மையம், முடிவு முதலியவற்றையும், கதிரவனின் அண்மை சேய்மையால் உண்டாகும் மாற்றங்களையும், பருவகாலங்களின் மாறுபாடுகளையும்,
19 ஆண்டுகளின் ஓட்டத்தையும் விண்மீன்களின் கூட்டங்களையும்,
20 விலங்கினத்தின் இயல்புகளையும், காட்டு மிருகங்களின் குணங்களையும், ஆவிகளின் வலிமையையும், மனிதரின் எண்ணங்களையும், செடி வகைகளையும், வேர்களின் பண்புகளையும் கற்பித்தவர் அவரே.
21 இன்னும் நான் மறைபொருளாய் இருக்கிறதையும் வெளிப்படையாய் இருக்கிறதையும் கற்றறிந்தேன்@ ஏனெனில் எல்லாவற்றையும் உருவாக்கிய ஞானமே எனக்குக் கற்றுத் கொடுத்தது.
22 ஞானத்தில் குடிகொண்டுள்ள ஆவி அறிவுடையது@ பரிசுத்தமானது, ஒரு தனித்தன்மைத்து, பல்வகை செயல்வன்மை வாய்ந்தது, நுண்மையானது@ இயக்குமாற்றல் வாய்ந்தது, தெளிவுமிக்கது, மாசுபடாதது@ திண்ணமானது, இனிமையானது, நன்மையை விரும்புவது@ கூர்மையானது, எதிர்க்க முடியாதது@
23 நன்மை செய்வது, மனிதர் மேல் பரிவுள்ளது@ நிலைபெயராதது, அசையாதது, கவலையில்லாதது@ எல்லாம் வல்லது, எல்லாவற்றையும் பார்வையிடுவது@ அறிவும் தூய்மையும் நுண்மையும் கொண்ட எல்லா உள்ளங்களையும் ஊடுருவிச் செல்வது.
24 ஞானம் அசைவுகளிலெல்லாம் மிக விரைவானது. அதன் தூய்மையின் காரணத்தால் எல்லாவற்றிலும் நிரம்பி நிற்கிறது, எல்லாவற்றையும் ஊடுருவிச் செல்கிறது.
25 அது கடவுளுடைய வல்லமையின் ஆவி@ எல்லாம் வல்லவரது மகிமையொளியின் தூய சுடர்@ ஆதலால் மாசுள்ளது எதுவும் அதற்குள் நுழைய முடியாது.
26 அது முடிவில்லா ஒளியின் எதிரொளி, கடவுளுடைய வேலைத்திறனின் கறை படியாக் கண்ணாடி@ அவருடைய நன்மைத் தனத்தின் சாயல்.
27 அது தனித்து நிற்பினும், அனைத்தையும் செய்ய வல்லது@ தான் மாறாமல் நிலைத்திருந்து, அனைத்தையும் புதுப்பிக்கிறது@ ஒவ்வொரு தலைமுறையிலும் பரிசுத்த ஆன்மாக்களில் நுழைந்து, அவர்களைக் கடவுளின் நண்பர்களாகவும் இறைவாக்கினர்களாகவும் ஆக்குகிறது.
28 ஞானத்தோடு வாழ்கிறவனுக்கு அன்பு செய்வதை விட வேறெவனுக்கும் கடவுள் மிகுதியாய் அன்பு செய்வதில்லை.
29 ஏனெனில் ஞானம் கதிரவனை விட அழகுவாய்ந்தது, விண்மீன் கூட்டங்களை விடச் சிறப்பு மிக்கது, ஒளியோடு ஒப்பிட்டால் ஞானமே மேலானது.
30 ஏனெனில் ஒளிக்குப் பின் இருள் சூழ்கிறது, ஆனால், தீமை ஒரு போதும் ஞானத்தை மேற்கொள்ளாது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 18 | 19 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஞான ஆகமம் - பழைய ஏற்பாடு, நான், ஏனெனில், ஏற்பாடு, தான், பழைய, ஒப்பிட்டால், எனக்குக், ஞானமே, ஆகமம், அவரே, எல்லாவற்றையும், கொண்டேன், எனக்கு, ஞானம், தான்@, அன்பு, எல்லாம், எல்லா, போலவே, அவர், கடவுள், வாய்ந்தது, அனைத்தையும், கடவுளுடைய, ஊடுருவிச், கொண்ட, இருக்கிறதையும், மேல், திருவிவிலியம், தாய், நானும், அதனோடு, மிகுதியாய், உண்டாகும், அதுவே, ஆன்மிகம், கடவுளின்