முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 27. வென்றிச் சிறப்பு
பதிற்றுப்பத்து - 27. வென்றிச் சிறப்பு
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : தொடர்ந்த குவளை
சிதைந்தது மன்ற, நீ சிவந்தனை நோக்கலின்- தொடர்ந்த குவளைத் தூ நெறி அடைச்சி, அலர்ந்த ஆம்பல் அக மடிவையர், சுரியல்அம் சென்னிப் பூஞ் செய் கண்ணி அரியல் ஆர்கையர், இனிது கூடு இயவர், |
5 |
துறை நணி மருதம் ஏறி, தெறுமார், எல் வளை மகளிர் தெளி விளி இசைப்பின், பழனக் காவில் பசு மயில் ஆலும்; பொய்கை வாயிற் புனல் பொரு புதவின், நெய்தல் மரபின், நிரை கள், செறுவின் |
10 |
வல் வாய் உருளி கதுமென மண்ட, அள்ளல் பட்டு, துள்ளுபு துரப்ப, நல் எருது முயலும் அளறு போகு விழுமத்துச் சாகாட்டாளர் கம்பலை அல்லது, பூசல் அறியா நல் நாட்டு |
15 |
யாணர் அறாஅக் காமரு கவினே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தொடர்ந்த, வண்ணம், துறை