கலித்தொகை - மருதக் கலி 82
ஞாலம் வறம் தீரப் பெய்ய, குணக்கு ஏர்பு, காலத்தில் தோன்றிய கொண்மூப் போல், எம் முலை பாலொடு வீங்கத் தவ நெடிதாயினை; புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு புக்க வழி எல்லாம் கூறு; | 5 |
கூறுவேன்; மேயாயே போல வினவி, வழிமுறைக் காயாமை வேண்டுவல், யான்! காயேம். மடக் குறு மாக்களோடு ஓரை அயரும் அடக்கம் இல் போழ்தின்கண், தந்தை காமுற்ற | 10 |
தொடக்கத்துத் தாயுழைப் புக்காற்கு, அவளும் மருப்புப் பூண் கையுறையாக அணிந்து, 'பெருமான், நகைமுகம் காட்டு!' என்பாள் கண்ணீர் சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன; மற்றும், வழிமுறைத் தாயுழைப் புக்காற்கு, அவளும் | 15 |
மயங்கு நோய் தாங்கி, மகன் எதிர் வந்து, முயங்கினள் முத்தினள் நோக்கி, நினைந்தே, 'நினக்கு யாம் யாரேம் ஆகுதும்?' என்று, வனப்பு உறக் கொள்வன நாடி அணிந்தனள், ஆங்கே, 'அரி மதர் உண்கண் பசப்ப நோய் செய்யும் | 20 |
பெருமான் பரத்தைமை ஒவ்வாதி' என்றாள்; அவட்கு இனிதாகி விடுத்தனன் போகித் தலைக் கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர் புலத் தகைப் புத்தேள் இல் புக்கான் அலைக்கு ஒரு கோல் தா; நினக்கு அவள் யார் ஆகும்? எல்லா! | 25 |
வருந்தி யாம் நோய் கூர, நுந்தையை என்றும் பருந்து எறிந்தற்றாகக் கொள்ளும்; கொண்டாங்கே, தொடியும் உகிரும் படையாக நுந்தை கடியுடை மார்பின் சிறு கண்ணும் உட்காள், வடுவும் குறித்தாங்கே செய்யும். விடு, இனி; | 30 |
அன்ன பிறவும், பெருமான் அவள்வயின் துன்னுதல் ஓம்பி, திறவது இல் முன்னி, நீ ஐயம் இல்லாதவர் இல் ஒழிய, எம் போலக் கையாறு உடையவர் இல் அல்லால் செல்லல்; அமைந்தது, இனி நின் தொழில். | 35 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 80 | 81 | 82 | 83 | 84 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நோய், பெருமான், யாம், நினக்கு, புக்காற்கு, தாயுழைப்